மேலும் செய்திகள்
அகூரில் முருகன் வீதியுலா
25-Jan-2025
திருத்தணி,ஆண்டுதோறும் ஒரு முறை, திருத்தணி அடுத்த, குமாரகுப்பம் கிராமத்தில், உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில் நடப்பாண்டில் நேற்று, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், குமாரகுப்பம் கிராமத்தில் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதையொட்டி, நேற்று, மாலை 4:00 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக மேல் திருத்தணி வந்தடைந்தார்.பின், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவர் முருகன் எழுந்தருளி, முருகூர் வழியாக குமாரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். பின் அங்குள்ள பஜனை கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், அனைத்து வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நள்ளிரவில் உற்சவர் முருகப்பெருமான் மீண்டும் திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்தடைந்தார்.
25-Jan-2025