உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பில் அலட்சியம்

மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பில் அலட்சியம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இலுப்பூர் ஊராட்சி. இங்கிருந்து பாப்பரம்பாக்கம் செல்லும்சாலையில், அப்பகுதியைச்சேர்ந்த பெண்கள் பயன்பாட்டிற்காக, 15 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.அதன்பின், 10 ஆண்டுகளுக்கு முன், 53,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், கட்டடம் சேதமடைந்தது. இதனால், பல ஆண்டுகளாக சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லை.மேலும், கட்டடத்தின் உட்புறம் முட்செடிகள் வளர்ந்து, புதர்மண்டிக் கிடக்கிறது. இந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அப்பகுதி பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ