மேலும் செய்திகள்
வாகன விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
29-Jul-2025
பெரியபாளையம்:வெங்கலில், இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த லாரி மோதி ஒருவர் பலியானார். வெங்கல் அடுத்த பாகல்மேடு பெரியகாலனி, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முருகன், 50. இவர், நேற்று முன்தினம் இரவு, திருவிழாவிற்கு உறவினர்களை அழைக்க, 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் கல்பட்டு நோக்கி சென்றபோது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த முருகன், சம்பவ இடத்திலேயே பலியானார்.
29-Jul-2025