உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

புழல்:புழல், கன்னடப்பாளையம், ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40; பெயின்டர். இவர், பிள்ளையார் கோவில் தெருவில், ரவி என்பவரது வீட்டில், சுண்ணாம்பு அடிக்கும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.அப்போது, வீட்டின் அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது, ஆனந்தனின் கை உரசியதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் ஆனந்தனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, ஆனந்தனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தாக தெரிவித்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி