மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 437 மனுக்கள் ஏற்பு
23-Sep-2025
மக்கள் குறைதீர் கூட்டம் 424 மனுக்கள் ஏற்பு
30-Sep-2025
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 369 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 45, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 28, வேலைவாய்ப்பு வேண்டி 15, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 58, இதர துறை 223 என, மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், தனித் துணை கலெக்டர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Sep-2025
30-Sep-2025