உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர், திருவள்ளூரில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தோர், நிலம் சம்பந்தமாக - 148, சமூக பாதுகாப்பு திட்டம் - 86, வேலைவாய்ப்பு வேண்டி - 135, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி - 146, இதர துறை - 257 என, மொத்தம் 772 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், கூடுதல் நேர்முக உதவியாளர் - நிலம் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை