உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு  மீன் பிடிக்க தடை

ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு  மீன் பிடிக்க தடை

கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதள மையத்தில் இருந்து, நேற்று, 'பிஎஸ்எல்வி சி-59/ப்ரோபா-3' விண்கலம் ஏவப்பட இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, இன்று, மாலை 4:12 மணிக்கு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.இதனால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க, நேற்று தடை விதித்திருந்த நிலையில், அந்த தடை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் சார்பில், தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ