உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் அருகே ஓடையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், ஓடையில் இருந்து மணல் ஏற்றி சென்ற டிராக்டரை மடக்கி பிடித்தனர்.அந்த டிராக்டரில் ஒரு யூனிட் மணல் கடத்தி செல்வது கண்டறியப்பட்டு, டிராக்டருடன் மணல் கைப்பற்றப்பட்டது. டிராக்டர் ஓட்டுநரான, கொண்டாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !