உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி சீரழிந்து வரும் கும்மிடி முருகன் கோவில் குளம்

பராமரிப்பின்றி சீரழிந்து வரும் கும்மிடி முருகன் கோவில் குளம்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி முருகன் கோவில் குளத்தை சீரமைத்து, புத்துயிர் அளிக்க வேண்டும் என, பக்தர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் அழகிய குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தின் உட்புறத்தை சுற்றி புதர்கள் மண்டியுள்ளன.படித்துறை தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. குளத்தின் வெளிப்புறத்தில் குப்பை குவிக்கப்படுவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.குளத்தின் தெற்கு திசையில் இருந்த சுற்றுச்சுவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. மற்ற திசைகளில் உள்ள சுற்றுச்சுவரும் விரிசல் கண்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.கும்மிடிப்பூண்டி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான குளம், தற்போது சீரழியும் நிலையில் உள்ளது. குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, புத்துயிர் அளித்து முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி