உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 11ல் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 11ல் தீமிதி திருவிழா

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மே மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று காலை 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தினமும் காலை மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனையும், மதியம் 1:00 முதல் மாலை 5:30 மணி வரை மஹாபாரத சொற்பொழிவும் நடக்க உள்ளது. வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை