உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர்:அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின்நிலைய வாயிலில், நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டில் வலியுறுத்தப்பட்டதாவது: புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வரை சந்திக்க முயன்றும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இல்லையெனில், அக்டோபர், 17ம் தேதி, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி