திருவள்ளூர்: புகார் பெட்டி; திறந்த நிலையில் மின்சாதனப் பெட்டி
திறந்த நிலையில் மின்சாதனப் பெட்டி
பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம், பாலசுப்ரமணி சுவாமி கோவிலின், வாகன நிறுத்துமிடம் அருகே, தெருவிளக்குகள் இயக்கும் மின்சாதனப் பெட்டி, திறந்த நிலையில் உள்ளது. தரைப்பகுதியில் இது அமைக்கப்பட்டிருப்பதால், சிறுவர்கள் அதில் கைவைத்து விளையாட வாய்ப்பு உள்ளது.திறந்த நிலையில் இருப்பதால், வாகன நிறத்துமிடத்திற்கு செல்லும் வாகனங்கள் அதில் உரசி மின்விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.- ஆர்.ஜி.கிருஷ்ணா,பொன்னேரி.