உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தல் இருவர் கைது

குட்கா கடத்தல் இருவர் கைது

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்துவதாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அண்ணாநகரில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், ஒரு பயணியின் உடமையில் 8 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், ஊத்துக்கோட்டையில் உள்ள வியாபாரி சோலைநாராயணன் வாங்கி வரச் சொன்னதாக கூறினார்.தகவலின்படி, ஆட்டோவில் வந்த பாண்டியன், 36, சோலைநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை