வங்கி முன் நிறுத்தியிருந்த டூ-வீலர் திருட்டு
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பநாதன் மகன் பிரசாந்த்,28. இவர் நேற்று முன்தினம் மதியம், தனது ஸ்பெண்டர் பிளஸ் இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்தார்.வங்கி முன் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று பணம் கட்டி விட்டு திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிந்தது. பிரசாத் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.