மேலும் செய்திகள்
ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை
23-Feb-2025
கும்மிடிப்பூண்டி,:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் முதல் ரயில்வே சுரங்கப்பாதை வரையிலான, 1 கி.மீ., சாலை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது. இந்த இடைப்பட்ட பகுதியின் சாலையோரம், நகரின் பொலிவை பாதிக்கும் வகையில் எப்போதும் குப்பை கழிவு சூழ்ந்து காணப்படும்.குறிப்பாக, இச்சாலையில் ஈசா பெரிய ஏரிக்கரையை ஒட்டி, 150 மீட்டர் நீள சாலையோரம், துர்நாற்றம் வீசும் கழிவு மலைபோல் குவிக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகங்கள், தனியார் தொழிற்சாலைகள், இறைச்சி கடையினர் என, தினமும் டன் கணக்கில் குப்பை குவித்து, எரித்து வருகின்றனர்.அதேபோல், ரயில்வே சுரங்கப்பாதையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையோரம், ஏராளமான கழிவு குவிக்கப்பட்டு வருகிறது. இச்சாலையோர கழிவுகளால், அப்பகுதிகளில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் சூழ்ந்து காணப்படும். இதனால், கும்மிடிப்பூண்டி நகரின் பொலிவு மட்டுமின்றி, சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.குறிப்பிட்ட அளவுக்கு மேல் கழிவு குவிந்ததும், அதை தீயிட்டு எரித்து வருகின்றனர். அப்போது கிளம்பும் சாம்பல் துகள்களால், மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படுவதுடன், ஈசா பெரிய ஏரி நீரும் மாசடைந்து வருகிறது.சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் ' குப்பை கொட்டாதீர்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்தும் பலனில்லை.எனவே, தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை குவித்து எரிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
23-Feb-2025