உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

மணவாளநகர்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி., க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர், ஒண்டிக்குப்பம், வெங்கத்துார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். மணவாளநகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் மணவாளநகர் கபிலர் நகர் அழகிரி தெருவைச் சேர்ந்த கவுதம், 32, என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2,000 ரூபாய். மணவாளநகர் போலீசார் கவுதமை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை