டிரைவர் உட்பட 2 பேர் பலி
துாத்துக்குடி: மதுரையில் இருந்து நேற்று மாலை திருச்செந்துார் நோக்கி அரசு 'ஏசி' பஸ், 15 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. துாத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரை பகுதியில் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் நல்லுசாமி, மும்பையை சேர்ந்த மகேஷ், 35, ஆகியோர் இறந்தனர்.