மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார் அருகே மேலமடம் பகுதியைச் சேர்ந்த ஆதிமுத்து மகன் தனசிங், 21. விபத்தில் சிக்கிய இவர், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.இதையடுத்து, கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் - திருச்சி; மற்றொரு சிறுநீரகம் - திருநெல்வேலி; கண்கள், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் எடுத்து செல்லப்பட்டன.உடல் உறுப்புகள் தானம் செய்த தனசிங் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் இளம்பகவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல், அரசு மரியாதை செலுத்தப்பட்ட பின் அடக்கம் செய்யப்பட்டது.