| ADDED : அக் 11, 2011 02:19 AM
திருச்செந்தூர் : திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிடும்
திமுக.,வேட்பாளர் மணல்மேடு சுரேஷ் தீவிரமாக வாக்கு
சேகரித்தார்.திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு திமுக.,சார்பில்
மணல்மேடு மா.சுரேஷ் போட்டியிடுகிறார். இவர் திருச்செந்தூர் 21
வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார்.
திருச்செந்தூர் அமலிநகரில் இவருக்கும், திமுக.,சார்பில் போட்டியிடும் 12வது
வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர் ஜெரால்ட்க்கும் தீவிரமாக ஓட்டு
சேகரித்தார். அவர் தேர்தலில் வெற்றிபெற்றதும் இப்பகுதி மக்களுக்கு தேவையான
குடிநீர் வசதி மற்றும் பொது சுகாதாரம் சிறப்படைவதற்காக பாடுபடுவேன் என்று
உறுதியளித்தார். இவர் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதி மக்கள் இவருக்கு
சிறப்பான வரவேற்பளித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட
பிரதிநிதி பொன்முருகேசன், 12வது வார்டு செயலாளர் அமலன், கழக தொண்டர்கள்
ஆனந்த், சீனிவாசன், ஆட்டோ கண்ணன், மணிகண்டன், ஸ்டாலின், முத்துக்குட்டி,
மதியழகன் உட்பட பலர் வேட்பாளர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தனர்.