திருச்செந்துார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக, 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.