தூத்துக்குடிக்கு கடற்படை மாதங்கி கப்பல் வருகை
இந்திய கடற்படையின் சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் உருவாக்கிய மாதங்கி சுயசார்பு கப்பல் அக்.,29ல் மும்பையில் கிளம்பியது.கொச்சி வழியாக இன்று தூத்துக்குடி துறைமுகத்தை அடைகிறது. மனித தலையீடு இல்லாமல் வழி செலுத்துதல் மற்றும் மோதல் தவிர்ப்பு மென்பொருளுடன் தானாக இயங்கும் தன்மை கொண்டது இக்கப்பல்.