உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / போதை தகராறில் தொழிலாளி கொலை: நண்பர் கைது

போதை தகராறில் தொழிலாளி கொலை: நண்பர் கைது

துாத்துக்குடி : முறப்பநாடு அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நண்பரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அனவரதநல்லுாரை சேர்ந்த சுடலைமாடன் மகன் மகாராஜன் 35. அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் முத்துக்குமார் 19. கட்டட தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவில் இருவரும் மது அருந்தினர்.அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. முத்துக்குமார், அரிவாளால் மகாராஜனை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முறப்பநாடு போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். இறந்த மகாராஜனுக்கு மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை