உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / 10 வயது சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொல்லை முதியவர் கைது

10 வயது சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொல்லை முதியவர் கைது

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பீடி சுற்றும் தொழிலாளி தங்கவேல், 63. இவர், ஜோலார்பேட்டையில் உள்ள தன் மகள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.அப்போது தெருவில் விளையாடிய, 10 வயது சிறுமியை நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, அவரது கை கால்களை கட்டி போட்டு, பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியை காணாமல் தேடிச்சென்ற பெற்றோர், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.புகார் படி, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார், தப்பியோடிய தங்கவேலுவை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்