மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
7 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
ஜோலார்பேட்டை,: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அத்தனாவூரை சேர்ந்தவர் குட்டி, 50; பைனான்ஸ் தொழில் செய்யும் இவர், அப்பகுதி கூலித்தொழிலாளி பெருமாள், 42, என்பவருக்கு, 10,000 ரூபாய் கடன் கொடுத்தார்.கடந்த, 2023 டிச., 16ல் பெருமாள் பைக்கை குட்டி பறிக்க, பணத்தை கொடுத்து விட்டு பெருமாள் பைக்கை மீட்டார். இதற்கு பழிவாங்க, குட்டியின் 8 வயது மகன் ராகேஷை, 2023 டிச., 20ல், தன் கள்ளக்காதலி காளியம்மாள், 39, என்பவருடன் சேர்ந்து, ஓகேனக்கல்லுக்கு காரில் கடத்தி, கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை காவிரி ஆற்றில் வீசினார். ஏலகிரி போலீசார், பெருமாள், காளியம்மாளை கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, பெருமாளுக்கு, ஆயுள் தண்டனை, கடத்தலில் ஈடுபட்டதற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். காளியம்மாள் விடுதலை ஆனார்.
7 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025