உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே, வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை, வனத்துறையினர் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பீமன் வட்டம் ஜார்பென்டாவை சேர்ந்தவர் கணபதி, 45. இவர், இரண்டு நாட்களுக்கு முன், காவலுார் காப்புக்காட்டில், வன விலங்குகளை வேட்டையாட, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தார். அப்போது அவரை, வனத்துறையினர் கைது செய்து, அவர் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பது தெரிந்தது. இது குறித்தும் வழக்குப்பதிந்து, கணபதியை மீண்டும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ