வணிகர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
அவிநாசி:அவிநாசியில் அதிகரித்து வரும் சாலையோர வியாபார கடைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அனைத்து வணிகர் சங்கத்தின், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், செயல் அலுவலர் சண்முகம், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோர் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வணிகர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.