உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளத்து கரையில் குவியும் பாட்டில்கள் விவசாயிகள் வேதனை

குளத்து கரையில் குவியும் பாட்டில்கள் விவசாயிகள் வேதனை

உடுமலை,; குளங்களின் கரைகள், திறந்தவெளி 'பார்' ஆக மாறி, அனைத்து தரப்பினரும் பாதித்தும், அரசுத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை நகரை ஒட்டி, ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட, ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட குளங்கள் அமைந்துள்ளன.பாசனத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் ஆதாரமாக உள்ள இக்குளங்களின் கரைகள் தற்போது, திறந்தவெளி 'பார்' ஆக மாற்றப்பட்டுள்ளது.நாள்தோறும், குளங்களின் கரையில், நுாற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் வீசப்படுவது வழக்கமாகியுள்ளது.நகரம் மற்றும் புறநகர் பகுதியிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் இருந்து, மதுபாட்டில்கள் வாங்கும் 'குடி'மகன்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில், குளங்களின் கரைகளை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.பின்னர், பாட்டில்களை உடைத்து, தண்ணீரிலும், கரைகளிலும், வீசிச்செல்கின்றனர். இதனால், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும், பாதிக்கப்படுகின்றனர்.இதே போல், அனைத்து கிராம குளங்கள், ஓடைகள், தடுப்பணை சுவர்கள் உள்ளிட்ட நீராதாரங்களிலும் இப்பிரச்னை அதிகரித்து வருகிறது.மேலும், அவ்வழியாக செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. நீராதாரங்கள் தொடர்ந்து மாசுபட்டு வருவதுடன், மக்களும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தும், பொதுப்பணித்துறை, போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.உடனடி நடவடிக்கையாக, கூட்டு ரோந்து குழு அமைத்து, ரோந்து சென்றால், பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !