மேலும் செய்திகள்
முதுகலை மாணவியருக்கு சிறப்பு கருத்தரங்கம்
21-Feb-2025
திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, கணினி அறிவியல் துறை சார்பில், 'அறிவுத்திறன் தொழில் நுட்பத்தின் நவீன வெளிப்பாடு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது.பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். கணிணி அறிவியல் துறைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் குமார் கொம்பையா வரவேற்றார். கர்நாடகா, ஜெயின் பல்கலை பேராசிரியர் முருகன், புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் சுரேந்திரன், உடுமலை அரசுகல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.திருப்பூர் எல்.ஆர்.ஜி., குமரன், செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி மாணவியர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் துரைசாமி நன்றி கூறினார்.
21-Feb-2025