உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீர்வு காணப்படாத ஆட்டோ டிரைவர் விவகாரம்

தீர்வு காணப்படாத ஆட்டோ டிரைவர் விவகாரம்

பல்லடம் : பல்லடத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்த அனுமதிக்குமாறு, புதிதாக சிலர் விண்ணப்பித்த நிலையில், ஏற்கனவே உள்ள ஆட்டோ டிரைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இருதரப்பினர் இடையே நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், சப் கலெக்டர் சவுமியா, ''விரைவில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.இதற்கிடையே, ஆட்டோ டிரைவர்களால், பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் சப் கலெக்டரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்கள், பஸ் ஸ்டாண்டை ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றி விடுமாறும் வலியுறுத்தினர்.ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்டு வரும் முரண்பாடு காரணமாக, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. உரிமத்தின் அடிப்படையில், ஆட்டோ டிரைவர்களுக்கு அனுமதி வழங்குவதுடன், போக்கு வரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், ஆட்டோ ஸ்டாண்ட்களை அமைக்க வேண்டும்.ஆட்டோ டிரைவர்கள் இடையிலான இப்பிரச்னைக்கு தற்போது தீர்வு காணவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M.I.NAGOOR MEERAN
ஜூன் 27, 2024 11:38

இந்த பிரச்சனைக்கு காரணமே பல்லடம் வட்டாட்சியர் அவர்கள் தான். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அவரே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி விட்டார்.இதன் தொடர்ச்சியாக என்ன பிரச்சனை நடந்தாலும் அதற்கு முழுப்பொறுப்பையும் வட்டாட்சியர் அவர்களே ஏற்க வேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை