மேலும் செய்திகள்
அரசு திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
8 hour(s) ago
லயன்ஸ் கிளப் சார்பில் பொறியாளர் தின விழா
8 hour(s) ago
சாய ஆலை சங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
8 hour(s) ago
குழாய் உடைந்து விரயமாகும் குடிநீர்
8 hour(s) ago
நாய்த் தொல்லைதிருப்பூர், 15 வேலம்பாளையம், பி.டி.ஆர்., நகரில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துாரத்திக் கடிக்கின்றன.- சர்வேஸ், பி.டி.ஆர்., நகர். குழாய் உடைப்புதிருப்பூர், ஆர்.வி.இ., லே-அவுட் ஐந்தாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட். திருப்பூர், 56வது வார்டு, கரட்டாங்காடு மூன்றாவது வீதி, புதுார் மெயின் ரோடு, எம்.ஆர்., நகர் கோவில் அருகே குழாய் உடைந்து, தண்ணீர் மூன்று மாதமாக வீணாகிறது.- செல்வக்குமார், எம்.ஆர்., நகர். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப் - அணைக்காடு பிரிவு சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி, சாலை சேதமாகியுள்ளது.- சங்கர்சதீஷ், அணைக்காடு. பல்லாங்குழி சாலைதிருப்பூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், பிருந்தாவன் ஓட்டல் சந்து வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- பிரியதர்ஷினி, லட்சுமி நகர்.சாலை சேதம்திருப்பூர், பெருமாநல்லுார் ரோடு, பூலுவப்பட்டி சிக்னல் அருகே சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். ரோடு போட வேண்டும்.- மனோகரன், பூலுவப்பட்டி. சாலை ஆக்கிரமிப்புதிருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வடக்கு உழவர் சந்தை செல்லும் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.- உமாசங்கர், எஸ்.வி., காலனி. தண்ணீருக்கு தவிப்புதிருப்பூர், கலெக்டர் அலுவலகம் கீழ்த்தளத்தில், கனரா வங்கி அருகே வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.- பிரேம்குமார், பல்லடம் ரோடு.குப்பைக்கு தீவைப்புகணியாம்பூண்டி ஊராட்சி பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.- ரஹீம்அங்குராஜ், கணியாம்பூண்டி. கிளைகளை அகற்றலாம்திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி பஸ் ஸ்டாப்பில் மரம் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.- வேலு, பெரியார் காலனி. ரியாக் ஷன்சாலை அமைப்புதிருப்பூர், 63 வேலம்பாளையத்தில் இருந்து சின்னக்கரை செல்லும் ரோடு கரடுமுரடாக இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின் ரோடு அமைத்துள்ளனர்.- வினோத், சின்னக்கரை. இடையூறு அகற்றம்அவிநாசி கிழக்கு ரத வீதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ்களை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர்.- கார்த்திக், அவிநாசி.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago