உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 1.3 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது: பைக் பறிமுதல்

1.3 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது: பைக் பறிமுதல்

தாராபுரம்; தொட்டப்புலுபாளையம்- - பஞ்சம்பட்டி ரோடு வழியாக ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக உணவு பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார், வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியாக வந்த ஒரு பைக்கில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர் தளவாய்பட்டிணத்தைச் சேர்ந்த தங்கராஜ், 39 என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதும் தெரிந்தது. போலீசார், 1.3 டன் அரிசி மூட்டை, பைக் பறிமுதல் செய்து, தங்கராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை