மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
03-Apr-2025
பல்லடம்: பல்லடம்-, உடுமலை ரோட்டில், தென்னை நாற்று உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்று உள்ளது. இங்கு, ஆனைமலை - கம்மாளபட்டியை சேர்ந்த முருகேசன் மகன் பரமசிவம், 29 என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன், 35; ஆட்டோ ஓட்டுனர். இருவரும் இணைந்து, பண்ணை பயன்பாட்டுக்காக வந்த கோழி தீவனத்தில், ஒரு டன் தீவனத்தை, ஆட்டோவில் திருடி சென்றனர். பண்ணை மேலாளர் சந்திரசேகர், 48 அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
03-Apr-2025