உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலையில் முடிந்த தகராறு

கொலையில் முடிந்த தகராறு

திருப்பூர்: திருப்பூர், ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் கணேஷ், 43; பனியன் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 2ம் தேதி கணேஷ் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் இறந்தார். இறுதி சடங்குக்கு சென்ற கணேஷ், அங்கு வந்த ஹரிஹரசுதன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டனர். அருகில் இருந்த முத்துக்குமார், 21, அஜீத், 26, தமிழ்மணி, 24 ஆகியோர் சேர்ந்து ஹரிஹரசுதனையும், கணேசையும் சமாதானம் செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், கணேசன் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து, அருகிலிருந்தோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால், அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த நல்லுார் போலீசார், முத்துக்குமார், அஜீத், தமிழ்மணி மற்றும் ஹரிஹரசுதன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை