புகையின்றி கழிவுகள் எரிக்க அக்ஸ்ரா டெக்ஸ் இயந்திரம்
திருப்பூர்; அக்ஸ்ரா டெக்ஸ் நிறுவனம் சார்பில், கழிவு மேலாண்மையில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, புகையில்லாமல் கழிவுகளை எரித்து அழிக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஈரக்கழிவு, மருத்துவக்கழிவு, மின்னணு கழிவு, தொழில்துறை கழிவு, நகராட்சி கழிவு, கோழிக்கழிவு ஆகியன புகையில்லாமல் எரித்து அழிக்கலாம். ஒரு நாளில், 100 முதல் 5 ஆயிரம் கிலோ கழிவுகளை அழிக்கும் திறனுடன் ஆறு மாடல்கள் உள்ளன. குறைந்த எரிபொருள் பயன்பாடு; சுற்றுச்சூழலுக்கு ஏற்றது; சாம்பல் செங்கல் உற்பத்தி செய்ய ஏற்ற 2 சதவீத சாம்பல் மட்டும் மீதமாகும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அக்ஸ்ரா டெக்ஸ் நிறுவனத்தை 90426 79633 மற்றும் 96006 66601 எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அதன் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.