கார், பைக் சாகசம்; மக்கள் ஆச்சர்யம்
திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லுாரியில், கார் மற்றும் பைக் ஷோ நடந்தது. கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி துவக்கிவைத்தார். கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பி.எம்.டபிள்யு., மினி கூப்பர், டார் ஜீப் உள்பட அதிக திறன் மிக்க 21 கார்கள்; 25 பைக்களின் சாகசங்கள் நடைபெற்றது. கோவையை சேர்ந்த பயிற்சிபெற்ற ஆண், பெண் ஓட்டுனர்கள் பங்கேற்று, கார் மற்றும் பைக்கிங் வீலிங், சாகசங்கள் செய்தனர்.மைதானத்தில், புழுதி பறக்க கார்கள் நடத்திய சாகசங்களை கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.