உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நடுரோட்டில் எரிந்த கார்

 நடுரோட்டில் எரிந்த கார்

தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். காரில் கோவை பீளமேட்டில் உள்ள ஆட்டோ ஷோரூமுக்கு சென்று கொண்டிருந்தார். உடன் நண்பர்கள் ஹாஜிகாதர், 30, காளிதாஸ், 31 ஆகியோர் சென்றனர். கார் சூரிய நல்லுார், காதபுள்ளப்பட்டி சுங்கசாவடியை அடைந்த போது, திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே, காரை ரோட்டோரம் நிறுத்தி, மூன்று பேரும் வெளியேறினர். சில நிமிடங்களில் கார் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் காரை அணைத்தனர். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை