உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 54 க்கு விற்பனையானது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 2,218 கிலோ எடையுள்ள, 5,544 தேங்காய்களை, 12 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 5 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.54க்கும், குறைந்த பட்சமாக, ரூ.41 என சராசரியாக, ரூ.50க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 5 ஆயிரத்து, 743. அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 2 விவசாயிகள், 2 மூட்டை அளவுள்ள, 55 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில், 5 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ.185க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.183 என, சராசரியாக, ரூ.181க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 10 ஆயிரத்து, 195 என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர். பருவ மழை துவங்கி வரத்து குறைந்துள்ள நிலையில், தேங்காய் விலை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில்,ரூ.20 வரை குறைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.