அரசு பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா
உடுமலை,; குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் சந்திரா பணி நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விழா நடந்தது.விழாவில் சங்கரராமநல்லுார் பேரூராட்சித்தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தாமோதரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கன்னிஸ்வரி, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் அவரின் பணி அனுபவம் குறித்து ஆசிரியர்கள் பேசினர்.