மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல்
15-Mar-2025
குமரலிங்கம்; உடுமலை - கொழுமம் தடத்தில், முக்கிய நகரமான கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் பஸ் போக்குவரத்தையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன.இதில், கொழுமம் தடத்தில், பிரதான நகரமாக குமரலிங்கம் உள்ளது. இந்நகரம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக டவுன்பஸ்கள், புறநகர் பஸ்கள் செல்கின்றனர்.போக்குவரத்து அதிகம் நிறைந்த இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
15-Mar-2025