பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; டாக்டர் குடும்பத்தினர் மீது வழக்கு
திருப்பூர்; திருப்பூரில், பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், நாகர்கோவிலை சேர்ந்த டாக்டர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மிதுளாநந்தினி, 36. இவருக்கும் நாகர்கோவில், வடசேரியை சேர்ந்த டாக்டர் சஞ்சய்க்கும் கடந்த, பத்து ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக, 51 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. கடந்த, 2017ம் ஆண்டு தம்பதி நாமக்கல்லில் வசித்து வந்தனர். அப்போது, மனைவி குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, கணவர் போதையில் மிதுளாநந்தினியை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார், கணவர் சஞ்சய், தந்தை அலெக்சாண்டர், தாய் இந்திரா உட்பட, ஒன்பது பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.