4 ஆண்டாக வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் பாராமுகம்
திருப்பூர்; திருப்பூர் ரயில்வே கேட் அருகிலுள்ள டி.பி.ஏ.காலனியில், காசி விஸ்வநாதர் கோவில் அருகே குடிநீர் குழாயில் ஏர் வால்வு சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது சரிசெய்யப்படவில்லை. இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் விணாகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 ஆயிரம் லிட்டர் என்றாலும், நான்கு ஆண்டுகளில் ஒன்றரை கோடி லிட்டர் தண்ணீர் வீணாகும். இது சாதாரண எண்ணிக்கையல்ல, 40 லட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான குடிநீர் ஆகும். இதனை விடவும் அதிகளவு நீர் வீணாகி வருகிறது என்பது அதிகாரிகளின் மெத்தனப்போக்கை சுட்டிக் காட்டுகிறது.