உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

அவிநாசி: சேவூர் அடுத்த பொங்கலுார் அருகே தண்டுக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் சின்ன ஆறுமுகம், 73, என்பவர் தவறி விழுந்தார்.அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் 40 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி இருந்த கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, முதியவரை மீட்டனர். சிகிச்சைக்காக அன்னுார் அரசு மருத்துவமனைக்கு முதியவர் அனுப்பி வைக்கப்பட்டார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களையும், சேவூர் போலீசாரையும் பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி