குமரன் கல்லுாரியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
திருப்பூர் : திருப்பூர் குமரன் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். 'இயற்கையின் சிறப்பு அதனை பாதுகாக்கும் வழிகள்' எனும் தலைப்பில், நேச்சர் சொசைட்டி அமைப்பு தலைவர் ரவீந்திரன் பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்.