உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏறுமுகத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி! தொழில் துறையினர் மகிழ்ச்சி

ஏறுமுகத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி! தொழில் துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர் ; 'ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த, அக்., மாதம், 35.06 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.இது குறித்து, அதன் தென் மண்டல தலைவர் சக்திவேல் கூறியதாவது:இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, முக்கிய துறைகளின் வளர்ச்சியை காட்டுகிறது. இந்தாண்டு, ஏப்., முதல், அக்., வரை, ஒட்டு மொத்த ஏற்றுமதி, 468.27 பில்லியன் அமெரிக்க டாலர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், 436.48 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்து, 7.28 சதவீத என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.அக்., 2024க்கான வர்த்தக ஏற்றுமதி, 39.20 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. இது, அக்., 2023ல், 33.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும் போது, 17.23 சதவீதம் அதிகம். ஒட்டு மொத்தமாக ஏப்., முதல் அக்., வரை, சரக்கு ஏற்றுமதி மொத்தம், 252.28 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. முந்தைய ஆண்டில், 244.51 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில், இது, 3.18 சதவீதம் என்ற நேர்மறை வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.அனைத்து ஜவுளிகளின் ரெடிமேட் கார்மென்ட்ஸ் ஏற்றுமதி, அக்., 2024ல், கணிசமான அளவு, 35.06 சதவீதம் அதிகரிப்பை கண்டுள்ளது. இது, அக்., 2023ல், 0.91 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, அக்., 24ல், 1.23 பில்லியனாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையான தொடர் வளர்ச்சி, நமது ஏற்றுமதி துறைகளின் வலிமையை அடிகோடிட்டு காட்டுகிறது. குறிப்பாக, ஆயத்த ஆடைகளில், நிதியாண்டின் இறுதிக்குள், ஆர்.எம்.ஜி., ஏற்றுமதியில் 15 முதல், 20 சதவீதம் வளர்ச்சியடைய முடியும். இந்த நேர்மறை போக்கு, ஏற்றுமதியாளர்களுக்கு வலுவான ஊக்கமளிக்கும்.இந்த வளர்ச்சி, நம் தரத்திற்கும், மிக நேர்த்தியான முறையில் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்புவதற்குமான அங்கீகாரமாக தெரிகிறது. இந்த வளர்ச்சி தொடரும் பட்சத்தில், இந்தாண்டு திருப்பூரின் ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ