வரும் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 20ம் தேதி நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் தலைமையில், வரும், 20ம் தேதி, பிற்பகல், 2:00 மணிக்கு, அரசு கல்லுாரி கூட்ட அரங்கில் நடக்கிறது.இதில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.