மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
07-Nov-2024
திருப்பூர் : விபத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இழப்பீடு வழங்காத காரணத்தால், திருப்பூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.திருப்பூர், கோவில்பாளையம் புதுாரை சேர்ந்தவர் சின்னசாமி, 58. விவசாயி. கடந்த, 2015ம் ஆண்டில், இவர் தனது மொபட்டில், பொங்கலுார் - காட்டூர் ரோட்டில் சென்றார்.அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் காயமடைந்தார். திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் சப் கோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார். அவருக்கு 8.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், அரசு போக்குவரத்து கழகம், இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடித்தது. இதனால், இந்த உத்தரவை நிறைவேற்ற கோரி, அவர் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் வக்கீல்கள் முருகேசன் மற்றும் சத்யா ஆகியோர் ஆஜராகினர்.கோர்ட் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். இததனை தொடர்ந்து, திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் கொண்டு சென்று நிறுத்தினர்.
07-Nov-2024