உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உயர்மின் விளக்கு அமைக்கணும்

 உயர்மின் விளக்கு அமைக்கணும்

உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும்,புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் செல்ல நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் இங்கு வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி உள்ளது. இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இருளில் மக்கள் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின்விளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை