உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெயந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் அபார தேர்ச்சி

ஜெயந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் அபார தேர்ச்சி

திருப்பூர்; திருப்பூர், அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் சுதர்ஷன், 474 மதிப்பெண் பெற்று, வேதியியல் பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். கவுரிகிருஷ்ணா 426 மதிப்பெண். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் மித்ரன்சச்சின், 439 மதிப்பெண், மாணவி ரக்சனா 411 மதிப்பெண். சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், பள்ளி செயலாளர் நீலாவதி, பள்ளி முதல்வர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ