உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது

அவிநாசி; அவிநாசி, வி.எஸ்.வி. காலனியை சேர்ந்த தங்கம் 72, என்பவர், கடந்த, 4ம் தேதி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வங்கியில் பணம் செலுத்தி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து டூ வீலரில் வந்த இரு வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து அவிநாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, காந்திஜி நகரை சேர்ந்த ரியாத் அலி மகன் யூனுஸ் உசைன் 24 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஷனபுல்லா மகன் மொகல் ஜாபர் 21, என தெரிந்தது. இவ்விருவரும், ஆந்தி ராவில் பதுங்கி இருந்ததை தனிப்படை போலீசார் கண்டறிந்து, அங்கு சென்று இருவரையும் கைது செய்து, அவிநாசி ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
செப் 24, 2025 07:40

இவர்களால் ஆந்திரா சென்று பதுங்க முடித்தது எதனால் என்று யோசித்தீர்களா திராவிட தமிழ் குரைப்பாளர்களே? அவர்கள் தாய்மொழி உருது அங்கும் பேசப்படும், பங்களாதேஷில் இருந்து வரும் முசல்மானும் தமிழகத்தில் பிழைப்பது இவர்களால் தான் என்று எப்போ உணர்வீர்கள் ?


முக்கிய வீடியோ