மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு சீருடை பற்றாக்குறை
19-Sep-2025
உடுமலை,: பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆர்.கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நுாலகத்திற்கு களப்பயணம் சென்றனர். பள்ளித்தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி, மாணவர்களை நுாலகத்துக்கு அழைத்துச்சென்றார். நுாலக வாசகர் வட்டத்தலைவர் தேவராஜ் மாணவர்களை வரவேற்றார். நுாலகர் லட்சுமணசாமி, புத்தக வாசிப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். தொடர்ந்து வீட்டுக்கொரு நுாலகம் அமைக்க உதவும் புத்தக உண்டியல் திட்டம் குறித்தும், அரசு புத்தக கண்காட்சி பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. நுாலகத்தில் அதிகமாக புத்தகம் வாசிக்கும் மாணவர்களுக்கு, பாராட்டு சான்றும், பரிசும் பள்ளி விழாவில் வழங்கப்படும் என மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நன்றி தெரிவித்தார்.
19-Sep-2025